tamilnadu

img

வாலிபர் சங்கம் சார்பில் ரத்த வகை கண்டறியும் முகாம்

நாமக்கல், அக்.9- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்திலுள்ள பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வடக்கு ஒன்றிய தலைவர் எம். செந்தில் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணி கண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் கண்ணன் மற்றும்  ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.