tamilnadu

img

ஆயங்குடிபள்ளம் வாய்க்கால் ஷட்டர் மதகில் உடைப்பு: வீணாகும் தண்ணீர்

சீர்காழி, ஆக.3- மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் அருகே ஆயங்குடிபள்ளம் பாசன கிளை வாய்க்கால் உள்ளது. இந்த கிளை வாய்க்கால் பிர தான தெற்குராஜன் வாய்க்கா லிலிருந்து கொன்னக்கா ட்டுப்படுகை அருகே பிரிந்து பாசன கிளை வாய்க்காலாக வந்து சுமார் 400 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதியளித்து விட்டு பின்னர் குத்தவக்கரை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் சென்று கலக்கிறது.  வாய்க்காலில் சனிக்கி ழமை முதல் மேட்டூர் அணை யிலிருந்து திறந்து விட ப்பட்ட தண்ணீர் 48 நாட்களை  கடந்த பின்புதான் வந்தது.  இருந்தும் பாசனத்திற்கு பய ன்படாமல் கோபாலசமுத்தி ரம் என்ற இடத்தில் ஆயங்குடி பள்ளம் கிளை வாய்க்காலில் அமைந்துள்ள ஷட்டர் மதகு  உடைந்திருப்பதால் தண்ணீர்  வாய்க்காலில் மேற்கொண்டு செல்ல முடியாமல் வடிகால்  வாய்க்காலை நோக்கி வீணா கிச் சென்று கொண்டிரு க்கிறது.  தற்போது சாமியம், ஆயங்குடிபள்ளம், கண்ணா ங்குளம் பகுதியில் சுமார் 150  ஏக்கரில் சாகுபடி செய்ய ப்பட்டுள்ள குறுவை நெற்ப யிருக்கு இதனால் தண்ணீர் கிடைக்காமல் போகும் நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும் ஆய ங்குடிபள்ளம் கிளை  வாய்க்கால் தூர்வாரப்ப டாமல் உள்ளது. எனவே விவ சாயிகளின் நலன் கருதி உடைந்த ஷட்டர் மதகை மீண்டும் கட்டித்தரவும் வாய்க்காலை உடனடியாக தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள் கோரிக்கை விடு த்துள்ளனர்.