tamilnadu

மின்கம்பி அறுந்து விழுந்து 4 பசு மாடுகள் பலி

தரங்கம்பாடி, ஆக.17- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள திருவிடைக்கழி வடக்கு வீதி யை சேர்ந்த சி.ராமதாஸ் என்பவருக்கு சொந்த மான 2 பசு மாடுகளும், அதே பகுதியை சேர்ந்த  எல். சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான 2  பசு மாடுகளும் ஆற்றங்கரை பகுதியில் உள்ள  வயலில் திங்களன்று காலை மேய்ந்து கொ ண்டிருந்தன. அப்போது விவசாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் இரு ந்துமின் கம்பிஅறுந்து விழுந்ததில் 4 பசுமாடு களும் அதே இடத்தில் பரிதாமாக உயிரிழந்தன. தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் எம்.கோமதி, பொறையார் காவல்துறை ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார்  சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையி ட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன  நான்கு பசு மாடுகளும் கருத்தரித்திருந்தன  என்பது குறிப்பிடத்தக்கது.