tamilnadu

img

கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா கால நிவாரணத் தொகை 2 ஆயிரம் ரூபாய் இதுவரை கிடைக்காதவர்களுக்கு உடனே வழங்க வலியுறுத்தி அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சீனிவாசன் தலைமை வகித்தார்.