tamilnadu

img

பெரம்பலூரில் வழக்கறிஞர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மே 16-பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்கள் பலரை, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் பாலியல்வன் கொடுமை செய்ததாக, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையபோலீஸார் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர் வழக்குரைஞர் ப.அருள். இவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அண்மையில் கைது செய்தனர். போலீஸாரின் இச்செயலைக் கண்டித்தும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் முகமது இலியாஸ் தலைமைவகித்தார். செயலர் துரை, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் மணிவண்ணன், புகழேந்தி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;