பெரம்பலூர் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கமலக்கண்ணன்(45) என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சிகளின் உதவி தணிக்கை அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரது மனைவி(40) வாலிபால் கோச்சாக இருந்து வந்துள்ளார். மேலும் கமலகண்ணனின் சித்தி, லதாவின் அம்மா, லதாவின் அண்ணன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் கார் ஒன்றில் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கார் பெரம்பலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த கமலக்கண்ணன், அவரது மனைவி லதா, லதாவின் அம்மா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இருவர் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.