பெங்களூரு:
அரசு ஊழியர்கள் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதற் கும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் நடிப்பதற்கும் தடை விதிக்க கர்நாடக பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக சட்டம் கொண்டுவரவும் முடிவு செய் துள்ளது.“கர்நாடக மாநில சிவில்சர்வீசஸ் (நடத்தை) விதிகள்-2020” என்ற வரைவு ஒன்றை,கர்நாடக அரசு வெளியிட்டுள் ளது.
கர்நாடக அரசு ஊழியர்கள் செய்யத்தக்கவை; செய்யக்கூடாதவை என சில வரையறுப்புகளை அதில் செய்துள் ளது. அந்த வரைவு விதிகளில் தான், “தகுதிவாய்ந்த உயர்அதிகாரியின் முன் அனுமதிகிடைக்காத பட்சத்தில், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சொந்தமாகவோ எந்தவொரு நாளிதழ் அல்லது குறிப்பிட்ட கால வெளியீட்டின் (வார,மாத இதழ்கள்) ஆசிரியராக இருப்பது அல்லது நிர்வாகத்தை நடத்துவது போன்ற பணிகளில் ஒரு அரசாங்க ஊழியர் இருக்கக் கூடாது; எந்தவொரு அரசு ஊழியரும் தங்கள் அலுவலகப் பணிகளை மீறி புத்தகம்எழுதி வெளியிடுவது அல்லது எந்தவொரு இலக்கிய அல்லதுகலை அல்லது விஞ்ஞான வேலை களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது” என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோலவே, “எந்தவொரு அரசாங்க ஊழியரும்திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில்நடிக்கக்கூடாது; வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் விளம்பரதாரர்கள் வழங்கும் ஊடக நிகழ்ச்சியிலோ அல்லது அரசாங்க ஊடகங்களால் நியமிக்கப்பட்ட ஒருஊடக நிகழ்ச்சியிலோ வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கக் கூடாது” என்றும் கூறப்பட்டுள் ளது.