tamilnadu

img

இணைந்து செயல்பட்டு கோவிட் பரவலை தடுக்க கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம்:
முதல் கட்டத்தில் தொற்றுநோயை திறம்பட கட்டுப்படுத்திய மாநிலம் கேரளாஎன்றும் தற்போது மிகவும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மே நடுப்பகுதியில், நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 16 ஆகக் குறைந்து காணப்பட்டது என்றும்அவர் கூறினார்.

கேரளத்திலும் கோவிட் நோய் தொற்றுபெருமளவுக்கு அதிகரித்து வரும் நிலையில் செவ்வாயன்று அரசு சார்பில் முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து திறமையாக பணியாற்றி மக்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பைப் பெற்றன. கோவிட் பாதுகாப்பில் பங்கெடுக்க தனியார் மருத்துவமனைகளையும் அரசாங்கம் நகர்த்தி வருகிறது. தனியார் துறையில் கோவிட் சிகிச்சைக்கானகட்டணங்களை நிர்ணயித்த முதல் மாநிலம் கேரளம்.அனைத்து வகையிலும் நோய் பரவுவதைத் தடுக்க முடிந்தது நமது பெருமைவாய்ந்த சாதனை. ஆனால் செப்டம்பரில் நோயாளிகளின் எண்ணிக்கையில் பெருமளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 7,000 ஆக அதிகரித்தது. 86 சதவிகித நோய் தொற்று தொடர்பு காரணமாக ஏற்படுகின்றன. இது மிகவும் தீவிரமான பிரச்சனை. இந்த நிலைமை தொடர்ந்தால், நாம் பெரும்ஆபத்தில் தள்ளப்படுவோம். எனவே,நோய் பரவலை எல்லா வகையிலும் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிறுவனங்கள் எடுக்கும். அதே நேரத்தில், உள்ளூர் மட்டத்தில் அரசியல் கட்சிகளின் நல்ல ஈடுபாடும் இருக்க வேண்டும்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சுகாதார பராமரிப்புக்கான வழிகாட்டுதல் களுக்கு உட்பட்டதாக இருக்க வேண் டும். போராட்டங்கள் நமது ஜனநாயக உரிமை. இதை யாரும் எதிர்க்க முடியாது. ஆனால் இன்று நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலையின் தீவிர தன்மையைக்கருத்தில் கொண்டு, போராட்டங்களிலும் கட்டுப்பாடுகள் தேவை. கூட்டம்தவிர்க்கப்பட வேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்குமாறு கோரப்பட்டது. கோவிட் டைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பிலிருந்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா துறையில் பணியாற்றுவோரின் வாழ்க் கையை முன்னோக்கி நகர்த்த இது அவசியம்.சந்தைகள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஆரம்ப விழிப்புணர்வு கணிசமாகக் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. இதன் மோசமான விளைவுகள் வெளிப்படையானவை. பயனுள்ள கட்டுப்பாடுகளை அமல் படுத்துவதில் உள்ளூர் அரசியல் கட்சித்தலைவர்களின் நல்ல விதமான தலையீடு இருக்க வேண்டும். இன்றுவரை, கோவிட் தடுப்பு முயற்சிகள் பொதுவாகசமூகத்தின் அனைத்து பிரிவுகளிடமிருந்தும் நல்ல ஆதரவைப் பெற்றுள்ளன.பொதுவாக நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலைப் புறக்கணித்து ஒரு கட்டத்தில் குறுகிய நலன்கள் உருவாகியுள் ளன. நோய் பரவுவது ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறும் போது இதுபோன்ற போக்கு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதியுடன் இருக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. அதை நாம் தடுத்தாக வேண்டும்.

இந்த நெருக்கடியை சமாளிக்க அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அனைத்துக் கட்சி கூட்டம் கோரியது. நாட்டையும் மக்களையும் முன்னிறுத்தி பொறுப்பான அரசியல் நடவடிக்கை மட்டுமே வெளிப்படும். இதைஉறுதிப்படுத்த ஒன்றிணைந்து செல்வதுஎன்கிற கருத்தை அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர். கோவிட் பரவாமல் தடுக்க ஒருமனதாக இணைந்து செயல்பட அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்துள்ளதாக முதல்வர் கூறினார்.