சுந்தர் பிச்சை அதிருப்தி
புதுதில்லி, ஜூன் 23- வேலைக்கான எச்1 பி , எச் 4 விசாக் களை, 2020 இறுதி வரை நிறுத்திவைக் கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு, தனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூகுள் நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
எச் -1 பி விசா எச் -1 பி விசா என்பது அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலைவாய்ப்பு விசாக்களில் ஒன்றாகும். இந்த விசாக்களில் பெரும்பான்மையானவை கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ், இன் போசிஸ் மற்றும் விப்ரோவும் இந்தியாவில் இருந்து அமெ ரிக்காவிற்கு பணியாளர்களை அனுப்ப பயன்படுத்தி வந்தன. அதற்கு டிரம்ப் தற்போது தடை விதித்துள்ளார்.
இதையடுத்து, “குடியேற்றங்கள் (வெளிநாட்டவர்) அமெ ரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன. இதனால் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவனாகவும் அமெரிக்கா உயர்ந்தது, ஆனால், தற் போதைய அமெரிக்க அரசின் பிரகடனத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.