tamilnadu

img

உன்னாவ் பாலியல் வழக்கு டிச.20 தண்டனை அறிவிப்பு

புதுதில்லி,டிச.17- உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்காருக்கான தண்டனை டிசம்பர்  20 அன்று  அறிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017 ஆம் ஆண்டில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை பல்வேறு தரப்பினரும் கண்டித்த பின்னர், இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.  இந்த வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்தது.  செங்கார் மீதான தண்டனை விபரங்கள் டிசம்பர்  20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.