புதுதில்லி:
இந்தியாவில் வேலையின்மை விகிதமானது, 2020அக்டோபரில், 6.98 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரித்து இருப்பதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்(Centre for Monitoring IndianEconomy) தெரிவித்துள்ளது.ஆண்டு துவக்கத்தில் வேலையின்மை விகிதம் மிகஅதிகமாக இருந்தது. இதற்குகொரோனா பொதுமுடக்கம் உள் ளிட்ட விஷயங்கள் காரணம் என்றாலும், பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பின்னால், இந்த விகிதமானது படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், செப்டம்பரைக் காட்டிலும், தற்போது அக்டோபரில் அதிகரித்துள்ளது. கடந்தசெப்டம்பர் மாதத்தில் வேலையின்மை 6.67 சதவிகிதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 1.04 சதவிகிதம் அதிகரித்து6.98 சதவிகிதமாக உயர்ந்துள் ளது.விவசாயத் துறையில் நல்லவளர்ச்சி காணப்பட்ட போதிலும், அக்டோபரில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறும் சிஎம்ஐஇ, இந்தக் காலத் தில், நகர்புற வேலையின்மை விகிதம் 7.15 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், இதுசெப்டம்பரில் 8.45 சதவிகிதமாக இருந்தது என்றும் குறிப் பிட்டுள்ளது.