tamilnadu

img

தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க ஹத்ராஸ் செல்ல ராகுலுக்கு அனுமதி

ஹத்ராஸ்:
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட தலித்இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்கூறுவதற்காகச் செல்வதற்குராகுல் காந்தி மற்றும் 4 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல்வன்கொலை செய்யப்பட் டார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற் படுத்தியுள்ளது. ஹத்ராஸ் வன்கொடுமையை கண் டித்தும், குற்றவாளிகள் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரியும் தொடர்ந்து போராட் டங்கள் நடைபெறுகின்றன. போராட்டங்களை தடுப்பதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல்வைக்கப்பட்டன. கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வியாழனன்று ஹத்ராஸ் நோக்கி ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர்சென்றனர். அப்போது மாநிலபாஜக அரசின் காவல்துறையினர் அராஜகமாக ராகுலைகீழே தள்ளி கைது செய்தனர். காவல்துறையின் செயலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.இந்நிலையில், பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை சந் திப்பதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சனிக்கிழமையன்று மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்பிக் களும் புறப்பட்டனர். காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டனர்.இதனால் தில்லி-உத்தரப்பிரதேச எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர். ராகுல் காந்தி மற் றும் 4 நிர்வாகிகள் மட்டும் ஹத்ராஸ் செல்ல நொய்டா போலீசார் அனுமதி அளித்தனர்.