tamilnadu

img

ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்த ஆயிரம் டாலர்... அட்டாசேக்கு கொடுத்ததாக சொப்னா வாக்குமூலம்

கொச்சி:
யுஏஇ தூதரக பார்சலில் தங்கம் கடத்தும் ஒவ்வொரு முறையும் அட்டாசேக்கு ஆயிரம் டாலர் வீதம் வழங்கியதாக சொப்னா சுரேஸ் சுங்கத்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள் ளார். தூதரக ஊழியர்களுக்கும் தங்ககடத்தலில் தொடர்பு உள்ளது எனவும்,தான் ஒரு இடைத்தரகராக செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2019 ஜூலை முதல் 2020 ஜூன் வரை19 முறை தங்கம் கடத்தப்பட்டது. ஒவ்வொரு முறை தங்கம் கடத்தும் போதுஅட்டாசேக்கு ஆயிரம் டாலர் அளவுக்கு கமிஷன் தரப்பட்டது. சந்தீபும்ரமீஸூம் தங்க கடத்தலின் சூத்திரதாரிகள். இருவரையும் துபாயில் வைத்துஅறிமுகமானதாகவும் தூதரக பார்சல்மூலம் தங்கம் கடத்தும் வேண்டுகோளை ரமீஸ் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவசங்கரனுடன் பழக்கம் மட்டுமே உள்ளது எனவும் சொப்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.

;