tamilnadu

img

தீக்கதிர் ஒருவரிச் செய்திகள்...

தமிழக நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப் படும் மண்ணெண்ணெய் விலை அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ரூ.1.30 முதல்ரூ.2.80 வரை உயர்கிறது.

                      ************

உக்ரைன் நாட்டில் விமானம் கீழேவிழுந்து நொறுங்கிய விபத்தில்22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

                      ************

கூகுள் பே ஆப்பை பயன்படுத்தும்மக்களின் பணப் பரிவர்த் தனை தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

                      ************

கடந்த 6 மாதங்களில் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் 4,431 பிரசவம் நடந்துள்ளதாக சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.

                      ************

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                      ************

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, வங்கிகளில் வைத்திருக்கும் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைப்பு செய்துள்ளது.

                      ************

செப்டம்பர் 28-ஆம் தேதி முதல்மாநகரப் பேருந்துகளுக் கான மாதாந்திர பயண அட்டை வழங்கப்படுகிறது.

                      ************

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்தது.

                      ************

நீட் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில்கேட்கப்பட்டுள்ள 180 கேள்விகளுக் கான விடைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

;