tamilnadu

img

6 கோடி தொழிலாளர்களை வஞ்சித்த மோடி அரசு!

இ.பி.எப். வட்டி விகிதம் 8.5 சதவிகிதமாக குறைப்பு

புதுதில்லி, மார்ச் 6 - இ.பி.எப். (Employees’ Provident Fund) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, 8.5 சதவிகிதமாக குறைத்து, நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களை மோடி அரசு வஞ்சித்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும்.  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி- அவர்களின் மாதச் சம்பளத்தில் 12 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். அதற்குச் சமமான தொகையை, அந்த ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமும் ஒதுக்கீடு செய்யும். இவ்விரு தொகையும் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யப்படும்.  இதனை சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற பின்னரோ அல்லது தங்களின் தேவையைப் பொறுத்தோ வட்டியுடன் பெற்றுக் கொள்வார்கள்.  அந்த அடிப்படையில் நாடு  முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர் கள், மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்திருந்த னர். இந்த சேமிப்புக்கான வட்டியையைத்தான் மோடி அரசு 8.5 சதவிகிதமாக குறைத்துள்ளது.

சி.பி.டி. எனப்படும் மத்திய வைப்புநிதி வாரிய அறக்கட்டளை நிர்வாகம், (Central Board of Trustees) ஒவ்வொரு ஆண்டும் இந்த வட்டி  விகிதத்தை மாற்றியமைப்பது வழக்கம்.  கடந்த நிதியாண்டுக்கான வட்டி விகிதம், 8.65 சதவிகித மாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டுக் கான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்காக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணைய நிர்வாகிகள் தில்லியில் கூடினர்.  பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பேட்டியளித்த அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்,  “தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், நடப்பு நிதியாண்டில் 8.65 சதவிகிதத்தில் இருந்து, 8.50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது” என்று அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தார். மேலும், “நிதி அமைச்சகத்துக்கு இதுகுறித்த  குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. நிதி அமைச்சக த்தின் ஒப்புதல் கிடைத்தபின், புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும்” என்று கூறிய அமைச்சர், வட்டிக் குறைப்பு மூலம், நடப்பு நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ரூ. 700 கோடி ‘மிச்சம்’ என்றும் குறிப்பிட்டார். வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 2012-13 நிதியாண்டில் 8.50 சதவிகிதமாக இருந்தது. அதிகபட்ச அளவாக 2015-16 நிதியாண்டில் 8.80 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2016-17 நிதியாண்டில் 8.65 சதவிகிதமாகவும், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவிகிதமாகவும் இபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, தற்போது மேலும் .05 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.