tamilnadu

img

முதல் கட்டமாக 375 பேரிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை

புதுதில்லி, ஜூலை 18- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 10 லட்சத்தை கடந்து விட்டது . கொரோனாவுக்கு தடுப்பூசி யை கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன் னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில்  ஐதராபாத்தில் தமி ழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுட னும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக் சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவ டிக்கை எடுத்தது.கோவேக்சின் பரிசோத னைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, பரிசோதனையில் ஈடுபடுத்துவதற்கான ஆட்களை தயார் செய்யுமாறும் கடந்த 7ஆம் தேதி, 12 மருத்துவமனைகளுக்கும் ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. இதன் அடிப்படையில், டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், சென்னை எஸ்ஆர்எம் உள்ளிட்ட 12 மருத்துவமனைகளில் முதல் கட்ட பரி சோதனை நடைபெறுகிறது. முதல் கட்ட பரிசோதனை 375 பேருடன் தொடங்கி நடைபெற்று வருவதாக தக வல்கள் வெளியாகியுள்ளது. முதல் கட்டத் தில், எதிர்மறையான விளைவு ஏற்படு கிறதா என்பது மட்டுமே சோதிக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என்பது, இரண்டாவது கட்டத்தில் பரிசோதிக்கப் படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் 7 நிறு வனங்கள் ஈடுபட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை மேற் கொள்ள இந்தியாவில் அனுமதி பெற்ற முதல் நிறுவனம் பாரத் பயோடெக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.