tamilnadu

img

முத்தலாக் வழக்கின் முதல் மனு தாரருக்கு இணை அமைச்சர் அந்தஸ்தில் பதவியாம்!

முத்தலாக் வழக்கில் முதல் மனுதாரருக்கு  பாஜகவில் சேர்ந்த சில நாட்களில் உத்தரகாண்டில் இணை அமைச்சர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. 
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சாய்ரா பானுவை அவரது கணவர் கடந்த 2014ம் ஆண்டில் முத்தலாக் முறைப்படி விவாகரத்து செய்தார். இதையடுத்து சாய்ரா பானு தொடுத்த வழக்கில் முத்தலாக் செல்லாது என்று அதைத் தடுக்க சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சாய்ரா பானு கடந்த 10ம் தேதி பாஜகவில் இணைந்தார்.  இதையடுத்து  அவர் உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது இணை அமைச்சர் அந்தஸ்திலான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.