tamilnadu

img

மனித துயரத்தின் தமிழக சாட்சியம் ( லோகேஷ் )

நாமக்கல், ஏப்.3- நாடு தழுவிய ஊர டங்கு உத்தரவு திடீ ரென்று அமலாக்கப்பட்ட தன் விளைவாக எழுந்த மிகப் பெரும் மனித துய ரத்தின் தமிழக சாட்சிய மாக மாறியிருக்கிறது, நாமக்கல் மாவட்டத் தைச் சேர்ந்த லோகேஷ் என்ற 23 வயதே நிரம்பிய ஓர் இளைஞனின் கொடிய மரணம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு டிப்ளமோ பட்டதாரி பி.லோகேஷ். நாக்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த வேலையில் பிப்ரவரி 14 அன்றுதான் அவர் சேர்ந்தார். இந்நிலையில், மார்ச் 24 அன்று நாடு தழுவிய ஊரடங்கு அறி விக்கப்பட்டது. வேலையில் சேர்ந்த சில நாட்களி லேயே இந்த நிலைமை ஏற்பட்டதால் அவரால் நாக்பூரில் எங்கும் இருக்க முடியவில்லை. நான்கு நாட்கள் எப்படியோ சமாளித்தவர், மார்ச் 30 அன்று நாக்பூரை விட்டு எப்படியாவது நாமக்கல்லிற்கு சென்றடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கிளம்பினார்.

லோகேசுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. நாக்பூ ரிலிருந்து கிளம்பிய லோகேஷ், ஒரு வாகனத்தில் ஏறி எப்படியோ வார்தா என்ற நகரை வந்தடைந்தார். அங்கிருந்து வாகனம் எதுவும் கிடைக்காத நிலையில் ஹைதராபாத்தை நோக்கி நடக்க துவக்கினார், 454 கிலோ மீட்டர் தூரம். அந்த இளைஞனின் கால்கள் எப்படியேனும் ஊர் போய் சேர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை யோடு நடந்தன. ஆனால் நடந்து நடந்து சோர்ந்து விட்டன. ஏப்ரல் 1 அன்று இரவு ஹைதராபாத்தை நெருங்கிய போது, லோகேஷால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அதேசமயத்தில் பலரும் இதே போல நடந்து வந்து கொண்டிருந்தார்கள். செகந்திரா பாத்தில் உள்ள போவனபள்ளி பகுதியில் வரும்போது, இந்த இளைஞனின் நிலைமை சரி யில்லை என்பதை உணர்ந்த அவர்கள், அப்பகுதி மக்களின் உதவியோடு அதிகாரிகளுக்கு தகவல் கூறி யுள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து லோகேசையும் மற்றவர்களையும் மாரடபள்ளியில் உள்ள தற்காலிக முகாமுக்கு கொண்டு சென்றுள்ள னர். அங்கு சென்றவுடனே லோகேஷ் மயங்கி விழுந்துள்ளார். 

அந்த சமயத்தில் லோகேசுடன் 25 இளைஞர்கள் இருந்துள்ளனர். லோகேஷ் சுயநினைவு இழந்து விழுந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து லோகேசின் உடல் ஹைதரா பாத் காந்தி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே இந்த தகவல் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைக்கப் பெற்றது. தெலுங்கானா அரசு மற்றும் காவல்துறையிடம் பேசி, லோகேஷ் உடலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. உடற் கூராய்வின் முடிவில், லோகேஷ் உடலில் நீர்ச் சத்து குறைவு ஏற்பட்டு அதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் லோகேஷ் உடல் பள்ளிபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன. லோகேஷின் தந்தை ஒரு ஜவுளிக் கடையில் வாட்ச்மேனாக வேலை செய்கிறார். அவரது தாயார் ஒரு ஜவுளி கம்பெனியில் கூலி வேலை செய்து வரு கிறார். அவர்கள் இருவரது கதறலும் அரசாங்கத்தின் காதுகளில் மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கி றது.