புதுதில்லி:
இந்தியாவில் நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 தொழில்துறைகளும் அடிப்படைத் தொழிற்துறைகளாக கருதப்படுகின்றன.
இவற்றை மையமாகக் கொண்டே ஏனைய அனைத்துத் துறைகளின் வளர்ச்சியும் அமையும் என்பதால் இவ்வாறு இவை முக்கியத் தொழிற்துறைகளாக (CoreSector) பார்க்கப்படுகின்றன.கடந்த ஓராண்டாகவே இந்த துறைகள் தொடர்ந்துசரிவில் சென்று கொண்டிருக்கின்றன. கொரோனா முழுபொதுமுடக்கக் காலகட்டத் தில் எதிர்மறை (மைனஸ்) வளர்ச்சிக்கு சென்றன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மேற்கண்ட 8 அடிப்படைத் தொழிற்துறைகளும் சுமார் 8.5 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் 0.2 சதவிகிதம் என்ற அளவிற்கே வீழ்ச்சி இருந்த நிலையில், அது தற்போது 8.5 சதவிகிதமாக மேலும் மோசமடைந்துள்ளது.கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இத்தொழில்களின் உற்பத்தியிலும் 17.8 சதவிகிதம் வீழ்ச்சிஏற்பட்டுள்ளது.தனித்தனித்துறையாக பார்த்தால், நிலக்கரித்துறை 3.6 சதவிகிதம், கச்சா எண்ணெய் மைனஸ் 6.3 சதவிகிதம், இயற்கை எரிவாயு துறை மைனஸ் 9.5 சதவிகிதம், சுத்திகரிப்பு பொருட்கள் துறைமைனஸ் 19.1 சதவிகிதம், உரங்கள் & ஸ்டீல் மைனஸ்6.3 சதவிகிதம், சிமெண்ட்மைனஸ்14.6 சதவிகிதம், மின்சாரம்மைனஸ் 2.7 சதவிகிதம்என்ற அளவில் உள்ளது.