tamilnadu

img

பாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை!

புதுதில்லி:
நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து, ‘2018-19’ ஒரே ஆண்டில் மட்டும் ரூ. 700 கோடியை தேர்தல் நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. இதனை பாஜகவே, தேர்தல்ஆணையத்திடம் அளித் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.பாஜகவின் இந்த அறிக்கையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக எவ்வளவு நிதி வந்தது என்பது குறித்துகுறிப்பிடவில்லை. தனி நபர்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும், ஆன்லைன் பரிமாற்றம், காசோலை ஆகியவை மூலம்பெற்ற நன்கொடையை மட் டும் குறிப்பிட்டுள்ளது.அந்த வகையில், மொத்தநன்கொடைத் தொகையான ரூ.700 கோடியில் பெரும் பகுதி ‘டாடா’ நிறுவனம் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலம்வந்துள்ளது. டாடா நிறுவனத்தின் சார்பில் இயங்கும் ‘புரோகிரஸிவ் எலக்ட்ரோல் டிரஸ்ட்’ அமைப்பு மட்டும் ரூ.356 கோடியை பாஜக-வுக்கு நன்கொடையாக அள்ளிக் கொடுத்துள்ளது.நாட்டின் பணக்கார அறக்கட்டளையாக கருதப்படும் ‘புரூடெண்ட் எலக்ட் ரோல் டிரஸ்ட்’ ரூ. 54 கோடியே 25 லட்சம் நன்கொடை அளித்துள்ளது. இந்த புரூடெண்ட் அறக்கட்டளையில், பார்தி குழுமம், ஹீரோ மோட்டார் கார்ப்,ஜூப்ளியன்ட் புட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமெண்ட், டிஎல்எப், ஜேகே டயர்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.அரசியல் கட்சிகள் ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால் அதை ரொக்கப் பணமாகப் பெறக் கூடாது. காசோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம் பெற வேண்டும் என்ற விதிமுறை இருப்பது குறிப் பிடத்தக்கது.

;