tamilnadu

img

பெருந்திரள் முறையீடு போராட்டம் : கிராம சுகாதார செவிலியர் சங்கம் முடிவு

கோவை:
ஊதிய முரண்பாடு போன்ற நிலுவையில் உள்ள  கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஜனவரி 9 வியாழனன்று மாபெரும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை கோவையில் நடைபெற்றது. தாமஸ்கிளப் வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பரமேஷ்வரி தலைமை தாங்கினார். இதில் பொது செயலாளர் பாண்டியம்மாள், மாநில செயலாளர் பிரகலதா உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  முன்னதாக இக்கூட்டத்தில் ஜனவரி 8 அகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.  மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு நடத்துவது எனவும், பிப்ரவரி 8 ஆம் தேதி கோவையில் நடைபெறும் மாநில பேரவை மாநாட்டை வெற்றிகரமாக்குவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

;