tamilnadu

img

சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

புதுதில்லி,நவ.8- காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு எஸ்.பி.ஜி. வழங்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த பாதுகாப்பில் உள்ளனர். சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அளிக்கப்பட்ட எஸ்பிஜியின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கி, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.