சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கரக்கோரம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள ராணுவப் பகுதியாகும். அங்கு கடந்த 1984ஆம் ஆண்டில் இருந்து இந்தியா தனது படைகளை நிறுத்தி உள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது, 6 ராணுவ வீரா்கள், 2 உதவியாளர்கள் அடங்கிய குழுவினா் பனிச்சரிவில் சிக்கினா். இதையடுத்து, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 8 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனா். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அதில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.