மயானமாக காட்சியளிக்கிறது வடகிழக்கு தில்லி
புதுதில்லி, பிப். 27- தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் முஸ்லிம் மக்களை குறி வைத்து ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் கடந்த மூன்று நாட்களாக நடத்திய கொடிய வன்முறை வெறியாட்டத்திற்கு பலியான வர்களின் எண்ணிக்கை 38 ஆக அதி கரித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாபராபாத், மவ்ஜ்பூர், சந்த்பாக், கோகுல்புரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தில்லி காவல் துறையினரின் உதவியோடு ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் துப்பாக்கி கள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் பகிரங்கமாக துப்பாக்கிச்சூடுகள் நடத்தி னர்; முஸ்லிம் மக்களின் சொத்துக்கள், உடைமைகள், கடைகள் உள்ளிட்ட அனைத் தையும் தீ வைத்து கொளுத்தினர்; வீடு களை சூறையாடினர்; குழந்தைகள் உட்பட எவரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்தக் கொடிய வன்முறை வெறி யாட்டத்தில் பலியானவர்களின் எண்ணி க்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வியாழனன்று மாலை நிலவரப்படி, குரு தேஜ்பகதூர் மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகள் வெளி யிட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாரா யண் மருத்துவமனையில் இருவரும், ஜேபிசி மருத்துவனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள் ளனர். அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காய மடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரு தேஜ்பகதூர் மருத்துவமனையில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் அனு மதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு தில்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வன்முறையில் உயிரிழந் தோரின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இரண்டு சிறப்பு புலனாய்வுக்குழுக்கள்
இந்நிலையில் தில்லி காவல்துறை, இந்த வன்முறை சம்பவங்கள் தொடர் பான விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் அளித்துள்ளது. இரண்டு சிறப்புப் புலனாய்வுக்குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன என தில்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரந்த்வானா தெரி வித்துள்ளார். வியாழனன்று இப்பகுதி களில் எந்த சம்பவமும் நடைபெற வில்லை; போதுமான அளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், இதுவரை 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். இதனிடையே வன்முறை வெறி யாட்டத்தால் பலியானவர்களின் உடல்கள் பார்க்கவும் பெறவும் குரு தேஜ்பகதூர் மருத்துவமனை உள்ளிட்ட வற்றில் எண்ணற்றோர் குவிந்திருந்த னர். எனினும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பலியானவர்களின் உற வினர்கள் கதறி அழுத காட்சிகள் மனதைப் பிழிந்தன. சம்பவம் நடந்த இடங்களிலிருந்து பல குடும்பங்கள் அச்சத்தின் காரணமாகவும் பாதுகாப்பு தேடியும் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளோடு வெளியேறி வருவதும் நடந்து கொண்டிருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்
இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி கள், தில்லி காவல்துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தில்லி வெறியாட்டத்திற்கு எதிராக கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து முறையீடு செய்வதற்கு நேரம் ஒதுக்கி அனுமதி தர வேண்டுமெனக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.