tamilnadu

img

ரூ. 2 ஆயிரம் கோடியை கொண்டு சேர்த்த அஞ்சல் ஊழியர்கள்...

புதுதில்லி:
கெடுபிடியான பொதுமுடக்க காலத் தில், அஞ்சல் ஊழியர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ரூ. 2 ஆயிரம் கோடியை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக கொண்டு சேர்த்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் பொது முடக்கம்அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவானது. பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்த இக்கட்டான காலத்தில் மருந்து,சிகிச்சைக் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள்அஞ்சல் துறை மூலம் கொண்டு சேர்க்கப்பட்டன. அத்துடன் கூடுதலாக அஞ்சல் துறை ஆற்றிய பணி என்னவென்றால், வங்கிக்கணக்கில் எடுக்க நினைக்கும் பணத்தையும் அஞ்சல் ஊழியர்களே எடுத்து டோர் டெலிவரி செய்த சேவைதான். இது பெரும்வரவேற்பைப் பெற்றது.

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி” சார்பில் சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில்ஆதார் சார்ந்த டிஜிட்டல் பணப் பரிவர்த் தனை சேவை தொடங்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்கள் எந்த வங்கியில் இருந்தும் “இந்தியா போஸ்ட்” மூலமாகப் பணம் எடுக்கலாம். அந்த அடிப்படையில், அஞ்சல் துறையின் இச்சேவையானது ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. ஊரடங்கு காலத்தின் 70 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடியை அஞ்சல் ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட முதல் 50 நாட்களில் ரூ. 1,000 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், அடுத்த 25 நாட்களிலேயே மேலும் ரூ. 1,000 கோடியை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.றிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் அஞ்சல் துறையின் இச்சேவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வீடுதேடிச் சென்று பணம் எடுத்துக் கொடுக்கும்சேவையில் சுமார் 2 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 லட்சத்து 36 ஆயிரம் அஞ்சல் நிலையங்களில் 1 லட்சத்து 86 ஆயிரம் ஆதார் சார்ந்த டிஜிட்டல் உபகரணங்கள் மூலமாக இச்சேவை வழங் கப்பட்டு உள்ளது.

;