tamilnadu

img

கலவரங்கள் நடப்பது சகஜமானதுதான்... ஹரியானா பாஜக அமைச்சர் சொல்கிறார்

புதுதில்லி:
வன்முறைகள் என்பது வாழ்க்கையில் சகஜமானது என்று ஹரியானா மாநில பாஜக அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருக்கிறார்.ஹரியானாவின் மின்வாரிய அமைச்சரான ரஞ்சித் சிங் சவுதாலா, தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது, தில்லி வன்முறைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு “கலவரம் நடப்பது இது முதல் முறை அல்ல” என்று பதிலளித்துள்ளார்.மேலும், “கலவரம் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த காலங்களிலும் அவை நடந்திருக்கின்றன. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, தில்லி முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தன. இது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அது இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

;