tamilnadu

img

5 ஆண்டுகளில் 2,25,733 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுதில்லி, பிப்.11- கடந்த 5 ஆண்டுகளில் 2,25,733 குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து, கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் மக்களவையில் எழுப்பிய கேள்விகளும், அதற்கு மத்திய  தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் சந் தோஷ் குமார் காங்வார்  அளித்த பதில்களும் பின்வருமாறு: மத்திய அரசு, நாட்டில் குழந்தைத் தொழி லாளர் முறையை ஒழிக்க எடுத் துள்ள பயனுள்ள நடவடிக்கைகள் என்ன. தற்போது வரை அடையா ளம் காணப்பட்டு விடுவிக்கப் பட்ட குழந்தைத் தொழிலாளர் எண் ணிக்கை என்ன? நடப்பு ஆண்டு  உட்பட கடந்த ஐந்து ஆண்டுக ளில், ஆண்டு வாரியாக, இந்த குழந்தைத் தொழிலாளர்கள் மறு வாழ்வின் தன்மை பற்றிய விப ரங்கள் என்னென்ன? குழந்தைத் தொழிலாளரே இல்லை என்ற நோக்கத்தின் பொருட்டு, அரசு  எடுத்த/எடுக்கின்ற நடவடிக்கை கள் பற்றிய விபரங்கள் என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற் காக பட்ஜெட்டில் செய்த/ செய்யப் போகும் ஏற்பாடுகள் என் னென்ன? மற்றும் அமைப்புசாரா  தொழிலாளருக்காக தேசிய பாது காப்பு போர்டு, பரிந்துரை செய்த, சமூகப் பாதுகாப்பு நிதி அமல்ப டுத்தப்படும் விபரங்களை தெரி விக்கவும். இவ்வாறு பி.ஆர்.நட ராஜன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் குமார் காங் வார்  பதிலளிக்கையில், இந்திய  அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் பொறுப் பினை ஏற்று உறுதி பூண்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்(தடை & ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1986 -ஐ, திருத்தம் செய்து, குழந் தைத் தொழிலாளர் (தடை & ஒழுங்குபடுத்துதல் ) சட்டம் 2016 -ஐ, ஏற்படுத்தி, 01.09.2016 முதல் நடைமுறைப் படுத்தியுள்ளது.  இந்த திருத்தச் சட்டம், 14 வய திற்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்த வேலை/தொழில் முறைக ளில், பணி அமர்த்துவதை/ வேலை  கொடுப்பதையும், 14 முதல் 18  வயதுள்ள வயது வந்த இளம் பரு வத்தினரை, அபாயகரமான தொழில்கள்/ செயல்முறைகளில் ஈடுபடுத்துவதையும் முற்றிலுமாக  தடை செய்கிறது. மேலும், இந்த சட்டத்தை மீறுகின்ற முதலாளி கள் மீது  கடுமையான குற்ற நட வடிக்கை எடுக்கவும் வழிவகை செய்கிறது. குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை, திருத்தம் செய்ததன் மூலம், அதனை சட்ட ரீதியாக வடி வமைத்து வலிமைப்படுத்திய பிறகு, அரசு, குழந்தைத் தொழிலா ளர் (தடை & ஒழுங்குபடுத்துதல்) திருத்த விதிகள், 2017 -ஐ வடிவ மைத்து, இதன்மூலம், மாநில அரசுகள் மற்றும் மாவட்ட அமைப்புகள் குழந்தைத் தொழிலா ளர் சட்டத்தை பயனுள்ள வகை யில் செயல்படுத்துவதை உறுதி செய்ய ஏதுவாக, மற்றவைகளுக்கு இடையில், கடமைகள் மற்றும் பொறுப்புகளை குறிப்பிட்டுள் ளது. அரசு, ஒரு ஆயத்தமான கணக்கீட்டு முறை போல், நிலையான இயக்க வழிமுறை களை, பயிற்றுனர்களுக்காகவும், பயிற்சி செய்பவர்களுக்காகவும், அமல்படுத்தும் மற்றும் கண் காணிக்கும் அமைப்புகளுக்காக வும் வடிவமைத்துள்ளது.

குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்விற்காக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்ச கம், 1988 முதல் தேசிய குழந்தைத்  தொழிலாளர் திட்டத்தை (NCLP) செயல்படுத்தி  வருகிறது. இத்திட் டத்தின் கீழ் வேலையிலிருந்து மீட்கப்பட்ட/ வெளியெடுக்கப் பட்ட 9-14 வயதிற்குட்பட்ட குழந் தைகள், முறையான கற்றலுக்குள் அனுப்பப்படுவதற்கு முன்பாக, NCLP யின் சிறப்பு பயிற்சி மையங் களில், பதிவு செய்யப்பட்டு, குறு கிய கால கல்வி, தொழிற்கல்வி,  மதிய உணவு, ஊக்கத்தொகை, உடல் நலம் பேணல் முதலான வசதிகள் அளிக்கப்படுகிறார்கள். 5-8 வயதுள்ள குழந்தைகள், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நெருங்கிய ஒத்துழைப்புடன், நேரடியாக, முறையான கற்றல் செயல்பாட்டிற்குள் இணைக்கப் படுகிறார்கள் . இந்த NCLP திட்ட மானது, தலைவர், சமூகத்தின் திட்ட இயக்குநர், மாவட்ட நோடல் அதிகாரி, தொழிலாளர் கமிஷனர் மற்றும் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியோரால் வழக்கமாக கண் காணிக்கப்பட்டு, மதிப்பீடு செய் யப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் சட் டத்தின் விதிகளை பயனுள்ள வகையில் அமுல்படுத்தவும், NCLP திட்டத்தை, சுமுகமாக செயல்படுத்தவும், ‘பென்சில்’ என்ற பெயர் கொண்ட (Platform for Effective Enforcement for No Child Labour) ஆன்லைன்  இணையம் உருவாக்கப்பட்டுள் ளது. இது, NCLP திட்டம் நன்கு  கண்காணிக்கப்படுவதன் மூல மும் செயல்படுத்தப்படுவதன் மூலமும் வெற்றி பெற உருவாக் கப்பட்டது. இந்த இணையம், மத்திய அரசை, மாநில அரசுகள், மாவட்டங்கள், அனைத்து திட்ட சமூகங்கள் மற்றும் பொது மக்க ளோடு இணைக்கிறது.  மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப் பட்ட தகவல்களின் படி, கடந்த 5 ஆண்டுகளில் மீட்டெடுக்கப் பட்ட மறுவாழ்வு தரப்பட்டு முறை யான கற்றல் முறைக்குள் அனுப் பப்பட்ட, மொத்தக் குழந்தைக ளின் எண்ணிக்கை கீழே கொடுக் கப்பட்டுள்ளது.

2015-16.....59076 பேர்
2016-17.....30979 பேர்
2017-18.....45344 பேர்
2018-19.....50284 பேர்
2019-20*...40050 பேர்
(*டிசம்பர் 2020 வரை) 
மொத்தம் 2,25,733

மீட்டெடுக்கப்பட்ட/வேலை யிலிருந்து வெளியெடுக்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் மறுவாழ்வை நோக்கமாகக் கொண்ட மத்தியப் பிரிவுத் திட்டம் - தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்திற்காக, நடப்பு ஆண்டின் (2019-20) பட்ஜெட்டில் (திருத்தப் பட்ட மதிப்பீடு)ரூ.78 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. ஒருங்கிணைக் கப்பட்ட பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டம் மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷ பீமா திட்டம் ஆகிய பெயரில், மத்திய அரசின் பங்கை மட்டும்  அளிப்பதற்காக , ஆயுள் காப்பீட்டு கார்ப்பரேஷனோடு சேர்ந்து, சமூக பாதுகாப்பு நிதி பேணப்படுகிறது. இவ்வாறு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார்  பதில ளித்தார்.