tamilnadu

img

பசுமாடு வளர்ப்பதால் ‘குற்ற மனநிலை’ குறையும்... ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டுபிடிப்பு

புனே:
பசுமாடுகளை வளர்ப்பது ‘குற்றவியல் மனநிலை’யை குறைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘ஆராய்ச்சி’ செய்து கண்டுபிடித்துள்ளார்.புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இந்த ‘ஆராய்ச்சி’ முடிவை அவர் தெரிவித்துள்ளார்.“சிறைச்சாலைகளில் பசுக் கூடங்கள் திறக்கப்பட வேண்டும். ஏனெனில் பசு வளர்ப்பு, சிறைவாசிகளின் ‘குற்றவியல் மனநிலை’யைக் குறைக்க உதவுகிறது. பசுக் கூடங்கள் அமைக்கப்பட்ட சிறைச்சாலைகளில், சிறைவாசிகளின் குற்றவியல் மனநிலை குறைந் ததை வெவ்வேறு சிறைச்சாலைகளின் அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர்” என்று பகவத் தெரிவித்துள் ளார்.இதனடிப்படையில், “நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பசு வளர்ப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.உலகெங்கும் இந்த உண்மையை உணர்த்துவதற்கு, பசுவை வளர்த்த பின் ஏற்படும்சிறைவாசிகளின் மாற்றங் களை உளவியல் பகுப்பாய வுக்கு உட்படுத்தி, அவற்றை ஆவணப்படுத்த வேண்டும்” என்றும் ‘அதிமுக்கியமான’ கோரிக்கைகளை முன்வைத் துள்ளார்.எல்லாவற்றுக்கும் மேலாக, “இந்தியாவில், மாடுகள் எப்போதும் ஒரு புனிதமான சூழ்நிலைக்காக வளர்க்கப்பட்டனவே, தவிர பால்மற்றும் அதன் பொருட்கள்ஒருபோதும் விற்கப்படவில்லை” என்றும் ‘அள்ளி’ விட்டுள்ளார்.

;