tamilnadu

img

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை  முடிவை  வெளியிட  தடை நீட்டிப்பு

புதுதில்லி:
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 22 வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார்.  இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு போட்டியிட்டார். இதை எதிர்த்து அப்பாவு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, தபால் வாக்குகள் மற்றும்  3 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன.இதை எதிர்த்து, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட, உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இந்த வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 22ஆம் தேதி வரைதடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அன்றைய தினத்திற்கு, வழக்கின் விசாரணையையும், உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

;