tamilnadu

img

தூக்கத்தில் வாகனம் ஓட்டுகிறார் பிரதமர் மோடி

பொருளாதாரம், கொரோனா ஆபத்தை உணரவில்லை

ராகுல் காந்தி சாடல்

புதுதில்லி, மார்ச் 13 - பொருளாதாரம், கொரோனா தொடர்பான பிரச்சனைகள் ஆபத்தாக  உருவெடுத்துள்ள நிலையில், அவற்றை திறம்பட கையாள வேண் டிய பிரதமர் மோடி ‘தூக்கத்தில் வாக னம் ஓட்டுபவராக உள்ளார்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி யின்போது, ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது:- “கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வதற்கு நாடு தயார் நிலை யில் இல்லை. பிரச்சனையின் தீவி ரத்தை உணராமல் இந்திய அரசு  தூங்குகிறது. கொரோனா இந்தியா வில் பரவி வருகிறது. இது பேர ழிவை ஏற்படுத்தும். நமது பிரதமர் தூங்கிக்கொண்டே வாகனம் ஓட்டுபவ ராக உள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவர் பிரச்சனையை புரிந்து கொள்ளவில்லை. பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பொருளாதாரம் பற்றியும், அது எப்படி வேலை செய்யும் என்பது பற்றியும் எந்த  புரிதலும் இல்லை. ஏற்கெனவே பங்குச் சந்தையில் சூழ்நிலை மாறிவிட்டது. இந்த சூழலில், இந்த தேசமும், மக்க ளும் நெடுஞ்சாலையில் விபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறி யுள்ளார்.
 

;