tamilnadu

img

வாக்கு எண்ணிக்கையில் மாற்றமில்லை - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

வாக்கு எண்ணும் முறையில் மாற்றம் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து தேர்தல் வாக்கு எண்ணும் முறையில் மாற்றமில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


நேற்று 20க்கும் அதிகமான எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கூட்டாக கோரிக்கை ஒன்றை வைத்து தேர்தல் ஆணையத்தை சந்தித்தன. இந்த சந்திப்பில் வாக்காளர் காகித தணிக்கை சீட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் சரிபார்த்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்டது.


தற்போது இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை வழக்கமான முறையில் நடைபெறும் என அறிவித்துள்ளது.