உலகில் கொரோனா பாதிப்பில் 7 வது இடத்தில் இந்தியா உள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மேலும் 230 உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5394 ஆக உயர்ந்துள்ளது.
மே 31 வரை 67,655 கொரோனா பாதிப்புகளுடன் மராட்டியம் நாட்டிலேயே மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் தொடர்கிறது. மாநிலத்தின் மொத்த 67 ஆயிரம் பாதிப்புகளில் மும்பை மட்டும் 39,686 ஆக உள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் கொரோனா டிராக்கரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் வழக்குகளின் பாதிப்புகளின் அடிப்படையில் 1,82,143 எண்ணிக்கையுடன் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும், உள்ளன. ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 3,4,5,6, வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.