விருதுநகர், டிச.8- நித்தியானந்தா உள்ளிட்ட அனைத்து போலிச் சாமியார் களுடன் ஏதாவது ஒரு வகையில் மோடி தொடர்பில் உள்ளார் என விருதுநகர் மக்களவை உறுப்பி னர் மாணிக்கம் தாகூர் கூறினார். விருதுநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: நித்தியானந்தா உட்பட நாட்டிலுள்ள அத்தனை போலிச் சாமியார்களும் மோடியுடன் ஏதா வது ஒரு வகையில் தொடர்பில் உள்ளனர். பொள்ளாச்சி சம்பவம் குறித்து மக்களவை உறுப்பினர் ஜோதிமணி நாடாளுமன்றத்தில் கேட்டபோது அமைச்சர்கள் யாரும் பதிலளிக்க மறுத்து விட்டனர். இந்தியா முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறை, நீதித் துறை இந்த வழக்குகளை கால தாமதம் செய்வதால் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை குறை கிறது. கடந்த இரு வாரமாக நடை பெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், சிறப்பு நிதி அளிக்கப்படமாட்டாது; வழக்கமான நிதியைக்கொண்டே வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கூறிவிட்டார். தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப்பொருளை வழங்க பெட் ரோலியம் நிறுவனத்தை வலி யுறுத்தியதால் தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு போதிய அளவு மூலப்பொருள் வழங்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.