tamilnadu

பொய் சொன்னதற்காக மோடி அரசு மீது தனி வழக்கு! யஷ்வந்த் சின்கா அறிவிப்பு

தில்லி, ஏப்.11-ரபேல் விவகாரத்தில், மோடி அரசானது,உச்ச நீதிமன்றத்திடமே பொய் கூறியிருப்பதை, ‘தி இந்து’ உள்ளிட்ட ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயும்,இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்நிலையில், ரபேல் தொடர்பாக மோடிஅரசு மீது வழக்கு தொடர்ந்தவரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரபேல்விஷயத்தில் மோடி அரசு, உச்ச நீதிமன்றத்திடம் பொய் கூறியதற்காக தனியாக வழக்கு தொடரப்படும்” என்றும் “மறுசீராய்வு மனுவுடன், இந்த பொய் வாக்குமூல வழக்கையும் நாங்கள் தொடர இருக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், “பிரதமர் மோடியின் அரசானது பொய்களின் அரசு ஆகும். அந்தப் பொய்கள்தற்போது வெளிவந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;