புதுதில்லி, செப். 26 - வன விலங்குகள் பிரச்சனைக்கு தீர்வுகாணக் கோரி, விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும், தில்லியில் நாடாளுமன்றம் நோக் கிய அணிவகுப்பையும், ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தையும் புதனன்று (செப்.25) நடத்தினர்.
வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து மனித உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும்; யானைகள் வழித்தடங் கள் மற்றும் புலிகள் சரணாலயங் கள் என்ற பெயரில் மக்கள் அப்புறப் படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்; தெருக்களுக்கு வரும் வன விலங்குகளால் எழும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, அகில இந்திய விவசாயி கள் சங்கமும், விவசாயத் தொழி லாளர் சங்கமும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.
ஜந்தர் மந்தரில் நடந்த தர்ணாவை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் விஜு கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கேரளம், இமாச்சல், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்க் கண்ட், தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தர்ணாவில் பங்கேற்றனர்.
பாதுகாக்கப்பட்ட வன விலங்கு கள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும்; பசுக் குண்டர்களின் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும்; உள்ளா ட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பு டன் பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தப் போராட்ட த்தின் போது முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
அம்பானி- அதானி போன்ற பெருமுதலாளிகளின் கொள்ளை க்கு வனத்தைத் திறந்து விடும் முயற்சிக்கு, வனப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் மற்றும் விவ சாயிகளை ஒன்றிய அரசு வெளி யேற்றி வருவதாகவும், இதனை ஏற்க முடியாது என்றும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இப்பிரச்சனை தொடர்பாக, இரண்டு நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் உறுதி அளித்திரு ப்பதாகவும் தெரிவித்தனர்.
விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, துணைத் தலைவர் ஹன்னன் முல்லா, நிதிச் செயலாளர் பி. கிருஷ்ணபிரசாத், இணைச் செய லாளர் வல்சன் பனோலி, தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் ஆர். சச்சி தானந்தம் எம்.பி., அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி. வெங்கட், இணைச் செயலாளர் வி. சிவதாசன் எம்.பி., அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே உள்ளிட்டோர் பேசினர்.