tamilnadu

img

நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மோடி அரசு 2 ஆண்டு சலுகை

ஸ்பெக்ட்ரம் பாக்கி ரூ. 92 ஆயிரத்து 642 கோடி

புதுதில்லி, நவ.23- உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் என்ற வகையில், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 92 ஆயிரத்து 642 கோடி ரூபாயை ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளன. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று, தனியார் தொலைத்தொடர்பு நிறு வனங்களுக்கு உச்சநீதிமன்றம் அண்மை யில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய பாஜக அரசோ, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி யுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தங்க ளால் உடனடியாக கட்டணப் பாக்கியை செலுத்த முடியாது என்று ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா உள்ளிட்ட நிறுவனங் கள் மத்திய பாஜக அரசை முறையிட்ட நிலை யில், மத்திய அரசு அவர்கள் மீது ‘கருணை’ காட்டியுள்ளது. சலுகை அளிக்கப்பட்ட வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் 23 ஆயிரத்து 920 கோடி ரூபாயையும், ஏர்டெல் 11 ஆயிரத்து 746 கோடி ரூபாயையும் பாக்கி வைத்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ 6 ஆயிரத்து 670 கோடி ரூபாயை செலுத்தாமல் உள்ளது.