tamilnadu

img

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மோடி அரசு அராஜகம்.... விவசாய விரோத மசோதாக்கள் நிறைவேற்றம்

புதுதில்லி:
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் விவசாயிகள் விரோத வேளாண்மை மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிறன்று நிறைவேற்றப்பட்டன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கு விரோதமான இந்த வேளாண் மசோத்தாக்களை எதிர்த்தும்திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப்,ஹரியானா மாநில விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இடதுசாரிக்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தின. அனைத்து விவசாய அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன.  நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்களை ஞாயிறன்று மத்தியவேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் தாக்கல்செய்தார். இந்த மசோதக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள், விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோத்தாக் களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து, முழக்கம் எழுப்பினர். பல்வேறு எம்.பி.க்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். இதனால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப் பட்டது. அவை மீண்டும் பிற்பகல் 1.42 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

;