மோடி அரசு கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் திட்டமிடப்படாத கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பொதுமக்கள் படும் சிரமங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மீது இதுவரை சுமார் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்11 வழங்குகள் உத்தரபிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் போதிய உணவு மற்றும் நிதி ஆதாரங்கள் இல்லாமல் மக்கள் அடையும் துயரங்களை அம்பலப்படுத்திய ஸ்க்ரால் இதழின் நிர்வாக ஆசிரியர் சுப்ரியா சர்மா மீது சாமியார் யோகி ஆதித்யநாத் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 269, 501 மற்றும் எஸ்.சி எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இது ஊடரங்கு காலத்தில் பத்திரிக்கை சுதரந்திரம் மீதான கடும் அச்சுறுத்தால் என்று சுப்ரியா சர்மா தெரிவித்துள்ளார்.