நான்தான் மோடிஜீ பேசறேன்.. ஆனா நான் பேசறது உங்க காதிலே விழாது. அதாவது எனக்குள்ளே பேசிக்கறேன். இது என்னோட மைண்ட் வாய்ஸ்.. அதாவது மைண்ட் கி பாத்!
இந்த வருடம் மே மாதம் நடந்த தேர்தல் முடிவைப் பத்தி எல்லாருமே ஆச்சரியப்பட்டி ருப்பீங்க. என்னை எப்படியும் தோக்கடிச்சுட ணும்னு ராகுல் காந்திலேருந்து பாகுல் பூந்தி வரை கச்சை கட்டி நின்னது உங்களுக்குத் தெரியும். 2014 தேர்தல்லே கொடுத்த வாக்குறு திகள்லாம் என்னாச்சுன்னு எல்லாரும் தொளைச்சு எடுத்தாங்க. தேர்தல் ஜூம்லாவை யெல்லாம் நீங்க சீரியசா எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்ண முடியும்னு அமித் கூட பீலா விட்டுப் பார்த்தார். ஆனா யாரும் எங்களை விடறாப்பலே இல்லே. விவசாயம், வேலையின்மை, ரஃபேல் ஒப்பந்தம், வராக் கடன்னு நாலா பக்கத்திலேருந்தும் எங்களுக்கு பிரெஷர். தமிழகத்திலேருந்து இந்தித் திணிப்பு, ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச் சாலைன்னு பல பிரச்சனைகள். கோ பேக் மோடின்னு கோஷம் போடற அளவுக்குப் போனீங்க. கடைசியிலே என்ன ஆச்சு?
கவனத்தைத் திருப்பணும்..
இந்தக் கட்டத்திலே எங்களோட நாக்பூர் பாஸ் டைரக்ஷன்படி நானும் அமித்தும் இவங்களை வேற இடத்திலே மேய விட்டுக் கவனத்தைத் திருப்பியாகணும்னு முடிவு பண்ணோம். புல்வாமா, பாலகோட், தேசபக்தி, பாகிஸ்தான், தேசவிரோதம்னு மக்கள் கவனத்தை அங்கே இங்கே இழுத்துட்டுப் போய் வாக்குகளை அள்ளிர்றதுன்னு முடிவு பண்ணோம். தேர்தல் செலவு எங்களுக்கு ஒரு பிரச்சனை நஹீம். அள்ளி அள்ளித் தரத்தான் கார்ப்பரேட் மகாஜனங்க இருக்காங்களே!
தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்கள்லே மக்கள் என்ன முடிவு பண்ணாங்க? “பண்ற அட்ராசிட்டியெல்லாம் நீ தாராளமாப் பண்ணு ராஜா.. இன்னும் நெறைய நெறையத் துல்லியத் தாக்குதல்களையெல்லாம் சந்திக்க நாங்க ரெடி, பாகிஸ்தான் கொட்டத்தை அடக்கினாப் போதும்”னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். கதையை அப்படி முடிச்சுட் டோம். நாங்க நெனச்சது ஒர்க்அவுட் ஆச்சு.. ஜம்னு திரும்ப வந்துட்டோம். எதிர்க்கட்சிகள் லாம் திகைச்சுப் போய் நின்னாங்க.. நிக்கறாங்க...
ரெண்டாவது இன்னிங்ஸ்லே..
இப்ப ரெண்டாவது இன்னிங்ஸ்லே எதிர்க் கட்சிகள், டிவிக்கள், மக்கள் யாருக்கும் கொஞ்சம் சிந்திக்கக்கூட நாங்க டயம் கொடுக்கறதில்லே. நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சிகள் பாட்டுக்கு கத்திக்கிட்டே இருப்பாங்க. நாங்க பாட்டுக்கு மசோதாக்களை அதிரடியாப் பாஸ் பண்ணிக்கிட்டே இருப்போம். எதிர்க்கட்சிகளை புழுவைவிடக் கேவலமா நாங்க நடத்த ஆரம்பிச்சப்புறம் என்ன செய்யறதுன்னு அவங்க யோசிச்சுக்கிட்டே இருக்காங்க. இப்ப ரொம்ப தூரம் அட்வான்ஸ் ஆய்ட்டோம். தேசிய குடிமக்கள் பதிவேடும் போம். திடீர்னு காஷ்மீரைப் பத்தி ஒரு மசோதா கொண்டு வருவோம். அதைப் பத்தி பேசிக்கிட்டி ருக்கும்போதே, நாட்டின் அடையாளத்தைக் காப்பாற்ற அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே இணைப்பு மொழி இந்திம்போம்.. இப்படி தூவிவிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்.. மத்தவங்க எங்க பின்னாலேதான் ஓடி வர முடியும். தாண்ட முடியாது. இதெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமேங்கறீங்களா? தெரிஞ்சா சரி...
காந்தி செய்த துரோகம்
இந்த நாட்டுக்கு மாபெரும் துரோகம் செஞ்ச காந்திஜியை நாங்க மறக்கறதா இல்லே. பக்கத்திலே கம்பீரமா நின்ன வல்லபாய் படேலைக் கண்டுக்காம, தன்னோட வாரிசா ஜவஹர்லால் நேருவை நம்ம தலையிலே கட்டிட்டுப் போன புண்ணியவான் இல்லையா அவர் ? அப்புறம் ஏன் காந்தி நினைவுநாளைக் கொண்டாடறீங்கன்னு கேப்பீங்க. காந்தி பேரைச் சொல்லாம இங்கே வண்டி ஓடாதுன்னு எங்களுக்குத் தெரியும். அவர் பேரைச் சொல்லவும் செய்யணும்.. சொல்லாமயும் இருக்கணும். இந்த தந்திரம்லாம் எங்களுக்கு யாராவது சொல்லித் தரணுமா என்ன? காந்தி நினைவு நாள் அன்று ஸ்வச் பாரத்-ம்போம்.. பிளாஸ்டிக்கை ஒழிப்போம்னு முழங்குவோம். உண்மையிலே அந்தப் பாவி உயிர்மூச்சா நெனச்சது இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கிராமப் பொருளாதாரம்-ங்கறதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? நாங்க அதைச் சொன்னா எங்க அஜெண்டா என்ன ஆறது? இந்து ராஷ்ட்ரா என்ன ஆவது?
எங்களுக்கு எதிரா நின்னவங்களை யெல்லாம் சுவீகரித்து உள்ள தள்றது எப்ப டிங்கற வித்தை எங்களுக்குத் தெரியும். அவங்களோட சிலைகளுக்கெல்லாம் நெத்தி யிலே விபூதி பூசி, காவி உடை உடுத்தி, கையில் ருத்ராட்ச மாலையைக் கொடுத்துடுவோம். இப்படி சூத்திரர் ஆட்சியை வரவேற்ற விவே கானந்தர், இறக்கும்போது நான் இந்துவாகச் சாகமாட்டேன்னு சபதம் போட்ட அம்பேத்கர், இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதி யாச்சுன்னு சிந்து பாடிய பாரதியார்னு ஒவ்வொ ருத்தரா விழுங்கியாச்சு. இப்ப திருவள்ளுவரைக் கையிலே எடுத்திருக்கோம். அவரை சும்மா விட்டுருவோமா? அவரையும் எங்க பரிவாரத்திலே சேர்த்துட்டோம். தாய்லாந் திலே போய் பேரணி நடத்தி திருக்குறளை வெளியிட்டேன் பாருங்க. தமிழ் மாதிரி ஒரு மொழி உண்டான்னு கேட்டுக்கிட்டே தமிழை ஒழிச்சுக் கட்டுவோம். எங்க வழி தனி வழி! அப்ப நான் வரட்டா?
கற்பனை : ராஜகுரு