tamilnadu

img

இ-பாஸ் கேட்கக் கூடாது

மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

புதுதில்லி,ஆக.22- மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை போட வேண்டாம் என்று உள்துறை அமைச் சகம் மாநில தலைமைச்செயலாளர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. பின்னர் தளர்வு களுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கால் மக்கள், தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்படுகின்றனர். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பர்கள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறி வித்தது.

ஆனால் மாநிலங்களுடை யிலான போக்குவரத்து நடைபெற வில்லை. இந்நிலையில் மாநிலங்க ளுக்கு இடையிலான போக்கு வரத்துக்கு தடை வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் மாநிலங்க ளுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள் ளது. மேலும், மாநிலங்களுக்குள் ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ- பாஸ் தேவையில்லை என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்கு வரத்து தடைபடுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.  வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக வும் மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முர ணானது என்றும் கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரத்தாகுமா?

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை இருந்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்தது அம்பலமானது. முறைகேட்டிற்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறையை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. எனினும் இ-பாஸ் பெற பல்வேறு கெடுபடிகள் இருந்துவந்தன. இந் நிலையில், கேட்கும் அனைவ ருக்கும் இ-பாஸ் உடனுக்குடன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இ-பாஸ் முறையால்தான் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்தினார். இந்நிலையில் இ-பாஸ் கேட்பது மத்திய அரசின் விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறானது என்று கூறப்பட்டுள்ள நிலையில் தமிழ கத்தில் இ-பாஸ் முற்றாக என்ற கேள்வி எழுந்துள்ளது.