tamilnadu

img

லட்சுமி என். மிட்டல் குழுமம்   நிவாரன நிதிக்கு ரூ. 100 கோடி 

பிரதமரின் அவசர கால, பொதுமக்கள் நிதி உதவிக்கு  லட்சுமி என். மிட்டல் குழுமம் ரூ. 100 கோடி வழங்கியுள்ளது.

 இது குறித்து அக்குழுமத்தின் தலைவர்  லட்சுமி என். மிட்டல் விடுத்துள்ள  அறிக்கையில் “உலக வரைபடத்தின் எல்லாக் கண்டங்களில் வாழும் மக்களும் இன்று கோவிட்-19  நோய் குறித்த அச்சத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எந்த தனி நாடும் விதிவிலக்கல்ல.  இந்நிலையில், மிக அதிக மக்கள் தொகை கொண்டதும், தனது வளர்ச்சியின் மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதுமான இந்தியாவில் இந்த பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இதுபோன்ற சிரமமான நேரங்களில் மற்றவர்களுடன் இணைந்து நிற்பது அவசியமானது. அரசுகள், நிறுவனங்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பும் தங்களது சக்தி, வளங்கள் என அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி, இந்த நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் எவ்வளவு விரைவாக களம் இறங்கி செயல்பட முடியுமோ அதைச் செய்ய வேண்டும்.

5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு அன்றாட உணவு கிடைக்க உதவுவதுடன், 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தாங்களே உணவு தயாரித்துக் கொள்வதற்கு தேவையான பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.