tamilnadu

img

கோஷ்யாரி ஆளுநரா, அரசியல்வாதியா? பிரதமர் மோடிக்கு சரத்பவார் கேள்வி

மும்பை:
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, இரண்டுநாட்களுக்கு முன்பு, அம்மாநிலமுதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குகடிதம் ஒன்றை எழுதினார்.அதில், மகாராஷ்டிர மாநிலத்தில் கோயில்களை திறக்காதது - குறிப்பாக, சித்தி விநாயகர்,விட்டல் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில் ஆகியவற்றை திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய கோஷ்யாரி, “நீங்கள் தீவிரமான இந்துத்துவவாதி என்பது அனைவரும் அறிந்தது. முதல்வர் பதவியேற்றுக் கொண்டவுடன் நீங்கள் அயோத்திக்கும் சென்று வந்தீர்கள். ஆனால், மகாராஷ்டிராவில் கோயில்களைத் திறப்பதை ஒத்திவைத்துள்ளீர்கள். 

இந்த விஷயத்தில் ஏதேனும் கடவுளின் முன்னறிவிப்புக்காக காத்திருக்கிறீர்களா? அல்லது திடீரென்று மதச் சார்பற்றவராக மாறிவிட்டீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது!” என்று வரம்பு மீறி வார்த்தைகளை பிரயோகித்து இருந்தார். இது கடும் சர்ச்சைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது.“நான் இந்துத்துவவாதி தான். ஆனால், எனது இந்துத்துவத்திற்கு நீங்கள் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை” என்று முதல்வர் உத்தவ் தாக்கரே ஒருபுறம் பதிலடி கொடுக்க, மற்றொரு புறத்தில், ஆளுநரின் பேச்சுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.“ஆளுநர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம், ஒரு அரசியல்கட்சியின் தலைவருக்கு எழுதப்பட்டதை போன்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. அரசி யலமைப்பின் முன்னுரையில், மதச்சார்பற்ற என்ற சொல் அனைத்து மதங்களையும் சமன் செய்து பாதுகாக்கிறது. எனவே, அரசியலமைப்பின் அத்தகைய கொள்கைகளை ஆதரிக்க வேண்டும். மாறாக, ஆளுநரின் கடிதம், அதன் தொனி மற்றும் பயன்படுத்தப்பட்ட  மொழிஅதிர்ச்சியையும், ஆச்சரியத்தை யும் அளிக்கிறது” என்று பவார்அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார்.காங்கிரஸ் மாநிலத் தலைவர் பாலாசாகேப் தோரட் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “பாஜக ஆட்சி நடக்கும் கோவாமாநிலத்திற்கும் பகத்சிங் கோஷ்யாரிதான் ஆளுநர் எனும்போது, அந்த மாநிலத்தில் கோயில்களை திறந்து விடுமாறு,ஏன் அவர் கடிதம் எழுத வில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.