உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வாதம்
சென்னை,ஆக.22- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப் பட்டால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என கூறுவது அபத்தமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். தூத்துக்குடியில் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய ஆவேச போராட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசு இந்த ஆலையை சீல் வைத்து மூடியது. இப்போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடியில் தொடச்சியாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மும் விதித்த உத்தரவுகளை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை இரண்டாவது நாளாக வியாழனன்று தொடர்ந்தது. ஸ்டெர்லைட் தரப்பிலும், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தரப்பிலும் வாதங்கள் நிறைவு பெற்றன. அதன் பிறகு இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் துவங்கியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் புதன் மற்றும் வியாழனன்று கீழ்க்கண்ட வாதங்களை முன் வைத்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு முன்பு பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் சட்ட விதிமுறைக ளுக்கு முரணாக அதிகாரிகளும், ஆளும் வர்க்கமும், ஸ்டெர்லைட்டும் சட்டங்களை வளைத்து ஆலையை அமைத்தது சட்ட விரோத மானதாகும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்கள் நலனை காவுகொடுத்து செயல்படு வது ஏற்கத்தக்கதல்ல. தொழில் வளர்ச்சி யானது மக்கள் நலனுக்கு கேடு விளைவித்து செயல்பட முடியாது. தொழில் வளர்ச்சி என்பது மக்கள் நலனுக்கு எதிரானதாகவும் இருக்க முடியாது. நிலையான தொழில் வளர்ச்சி என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, மக்கள் நலனுக்கு கேடு விளை விப்பதாக இருக்கக் கூடாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு மக்களுக்கு வாழ்வாதார உரிமையையும், மாசற்ற சுற்றுச்சூழல் உரிமையையும் அடிப்படை உரி மையாக கொடுத்துள்ளது. அதற்கு நேர் எதிராக சுற்றுச்சூழலை பாழ்படுத்தி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் நலனைப் புறக்க ணித்து லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனம் ஒரு சமூகக் கேடாகும். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நிறுவப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதார பாதிப்பு என்பது மக்கள் நலனுக்கு விரோதமானதாகும். ஸ்டெர்லைட் ஆலை மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.200 கோடி செலவு செய்து நிறுவப்பட்ட பிறகும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அங்குள்ள மக்கள் போராடி விரட்டி யடித்தனர். அதன் பிறகு கோவா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப் பட்டது.
காப்பர் (தாமிரம்) தயாரிப்பதற்கு தேவை யான மூலப்பொருளான காப்பர் கான்சன்ட்ரேட் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாம்பி யா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தாமிர தாது தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும் பகுதியை ஸ்டெர்லைட் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சுற்றுச்சூழல் விதிமுறை களை தொடர்ச்சியாக மீறி ஸ்டெர்லைட் செயல்பட்டு வந்ததால் ஆலையை சுற்றி யுள்ள கிராமங்களிலும், தூத்துக்குடி மாநகர பகுதிகளிலும் காற்று, நீர், மண் பாழ்பட்டுள் ளதுடன், பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மனித உறுப்புகளும் பாதிப்படைந்துள்ளன. கோவாவில் ஏர்போர்ட் புதியதாக அமைப்பதற்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்று உச்சந்திமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றமும் புதிய விமானநிலையம் அமைக்க சமீபத்தில் தடை விதித்துள்ளது. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் விமான நிலையம் அமைப்பதற்கே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதிக அளவு மாசை வெளிப்படுத்தும் சிவப்பு வகை தொழிற்சாலையான ஸ்டெர்லைட் அமைப்பதற்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தது சட்ட விரோதமான தாகும். தூத்துக்குடி மக்களின் விருப்பத்திற் கும் விரோதமானதாகும்.
காப்பர் (தாமிரம்) தயாரிப்பதற்கு தேவை யான மூலப்பொருளான காப்பர் கான்சன்ட்ரேட் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாம்பி யா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தாமிர தாது தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும் பகுதியை ஸ்டெர்லைட் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சுற்றுச்சூழல் விதிமுறை களை தொடர்ச்சியாக மீறி ஸ்டெர்லைட் செயல்பட்டு வந்ததால் ஆலையை சுற்றி யுள்ள கிராமங்களிலும், தூத்துக்குடி மாநகர பகுதிகளிலும் காற்று, நீர், மண் பாழ்பட்டுள் ளதுடன், பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மனித உறுப்புகளும் பாதிப்படைந்துள்ளன. கோவாவில் ஏர்போர்ட் புதியதாக அமைப்பதற்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்று உச்சந்திமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றமும் புதிய விமானநிலையம் அமைக்க சமீபத்தில் தடை விதித்துள்ளது. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் விமான நிலையம் அமைப்பதற்கே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதிக அளவு மாசை வெளிப்படுத்தும் சிவப்பு வகை தொழிற்சாலையான ஸ்டெர்லைட் அமைப்பதற்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தது சட்ட விரோதமான தாகும். தூத்துக்குடி மக்களின் விருப்பத்திற் கும் விரோதமானதாகும்.
மக்களிடையே மோதலை ஏற்படுத்த ஸ்டெர்லைட் சதியா?
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டதால் தான் ஆலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 2013-இல் இருந்து 2018 வரை இதன் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான அனுமதி ஸ்டெர்லைட் நிறுவனம் பெறப்படவில்லை. சுமார் 5 ஆண்டுகள் வரை அனுமதிச்சான்று பெறாமல் ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வாறு செயல்பட்டு லாபம் ஈட்ட முடிந்தது. கம்பெனிஸ்ஆக்ட் 2013-ல் போடப்பட்ட புதிய விதியின் படி எந்த நிறுவனமும் தனது லாபத்தில் 2 விழுக்காடு சமூக பாதுகாப்புநிதியாக வைத்து மக்களுக்கு செலவு செய்திருக்க வேண்டும் ஆனால் இங்கு அவ்வாறு செய்யப்படவில்லையே. 2018-ல் ஆலை மூடிய பின்னர் மக்களை தாஜா செய்வதற்காக வழிபாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதாக சொல்வது ஏன்?. இதனால் உழைக்கும் மக்களிடையே மோதலை ஏற்படுத்த இந்நிறுவனம் முயல்வதாக சந்தேகம் எழுகிறது. ஸ்டெர்லைட் திறக்கப்படுவதால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என்று கூறுவது அபத்தமானது. இது சமூகத்தின் தேவைக்கானது அல்ல, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கா னது. சுற்றுச்சூழலை அழிப்பதுதான் வளர்ச்சி என்று கூறும் கார்ப்பரேட்களின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என சிபிஎம் தரப்பில் தனது வாதங்களை மூத்த வழக்கறி ஞர் என்ஜிஆர். பிரசாத் முன்வைத்தார். அவருடன் வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லான், சுப்புமுத்துராமலிங்கம், பர்வீன்பானு, சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் ஆகியோர் ஆஜராகினர்.
டன் கணக்கில் உயிர்க்கொல்லி ஆர்சனிக் தனிமம் என்னவானது?
வழக்கறிஞரின் கிடுக்கிப்பிடி
ஸ்டெர்லைட் நிறுவனம் வெளி நாடுகளிலிருந்து தாமிர உற்பத்திக்கான மூலப்பொருட்களை தூத்துக்குடியில் இறக்குமதி செய்வதா கவும் அதில் 36 விழுக்காட்டை மட்டுமே இந்தியாவில் பயன்படுத்துவதாகவும் மீதம் உள்ள 64 விழுக்காட்டை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதாக ஸ்டெர்லைட் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள் ளது. ஸ்டெர்லைட் தனியார் நிறுவனம், இதே உற்பத்தியை செய்யும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் செயல்பட்டுவரும் நிலையில் ஸ்டெர்லைட் மட்டுமே இந்தியாவின் தேவையை பூர்த்திசெய்வதாக கூறுவது திசைத்திருப்பலான வாதமாகும். ஸ்டெர்லைட் இறக்குமதி செய்யும் காப்பர் கான்ஸ்ட்ரேட் எனப்படும் மூலப்பொரு ளில் ஆர்சனிக், வெள்ளி, தங்கம் உள்ளிட்ட பல உலோகங்கள் உள்ளன. இதில் தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுத்து விற்பனை செய்து லாபம் ஈட்டும் ஸ்டெர்லைட் , ஆர்சனிக் என்ற நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் தனிமம் என்ன செய்யப்படுகிறது என்று இதுவரை சொல்லவில்லை. 2013-இல் இருந்து 2018 வரையில் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான டன் எடைகொண்ட உயிர்க்கொல்லி ஆர்சனிக் என்ன ஆனது என்ற விளக்கத்தை இதுவரை நிர்வாகம் சொல்லவில்லை.