மும்பை:
இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளியுமான அர்னாப் கோஸ்வாமி, பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுத்து, தனது டிவி நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்ததை, கடந்த வாரம் மும்பை காவல்துறை கண்டுபிடித்தது.தொலைக்காட்சி மதிப்பீட்டுபுள்ளி எனப்படும் டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரித்துக் காட்டுவதற்காக நீண்ட காலமாக அவர், இந்த லஞ்சமுறைகேட்டில் ஈடுபட்டு வந்தார் என்றும், தங்களின் டிவி-யில் எந்நேரமும் ரிபப்ளிக் சேனலை ஓட விடுவோருக்கு ‘ஹன்சா’ என்ற நிறுவனம் மூலம் மாதம்தோறும் ரூ. 400முதல் 500 வரை பணம் கொடுத்து வந்தார் என்றும் குற்றம்சாட்டிய காவல்துறை, அவர் மீது வழக் கும் பதிவு செய்தது. இதேபோல பக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகியசேனல்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அந்த சேனல் களின் உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரிபப்ளிக்டிவி முதலாளியான அர்னாப்கோஸ்வாமி. கைது நடவடிக் கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இந்நிலையில், டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி,மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், முறைகேடான செயலில் ஈடுபட ‘ரிபக் ளிக்’ டிவி எங்களுக்கு பணம் கொடுத்தது உண்மைதான்.. என்று வாக்குமூலம் அளித் துள்ளனர். அதாவது, மூன்று சாட்சிகளும் ‘ரிபப்ளிக் டிவி’ அதிகாரிகளின் மேற்பார்வையில், பார்வையாளர்களின் மோசடியில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர் என்று மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையில் இருப்பதால் மேலும் விவரங்களைத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.இதனிடையே, பால்கர் கும்பல் கொலை மற்றும் பாந்த்ராபுலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான கருத்துக் களைக் கூறிய விவகாரத்திலும், மும்பை காவல்துறை ‘ரிபப்ளிக்’ டிவி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.