ஒவ்வொரு ஆண்டும் குஷ்மேன் ரூ வேக்ஃபீல்ட் அமைப்பு உலகளாவிய உற்பத்தி இடர் அட்டவணையை வெளிவிடும்.இந்த ஆண்டிற்க்கான குஷ்மேன் ரூ வேக்ஃபீல்ட் 2020 உலகளாவிய உற்பத்தி இடர் அட்டவணையை வெளியிட்டது.இதில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.இந்த தர வரிசையானது உற்பத்திக்கு தேவையான சிறந்த இடம் மற்றும் அரசு உற்பத்தியாளர்களுக்கு விதிக்கும் வரி போன்ற அடிப்படையில் வெளியிடப்படும்.
இதில் சீனா,அமேரிக்கா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.இதை பார்க்கும் போது 1980 ஆண்டின் புதிய பொருளாதார கொள்கைக்கு பிறகு இந்திய நாட்டின் நிறுவனங்கள் முன்னேறிச் செல்கிறது .ஆனால் இந்தியாவின் நிலையும் ,இந்தியாவில் உள்ள மக்களின் நிலையும் முன்னேறியுள்ளதா என்பது கேள்விக்குறி தான்.
சென்ற 16ம் தேதி முகேசு அம்பானி உலக பணகாரர்கள் வரிசையில் 5வது இடத்தை பெற்றுள்ளார்.பெரும் கார்ப்ரேட் தொழிலதிபர்களுக்கு இன்றைய பாஜக அரசு பல்வேறு வசதிகளை செய்வதன் காரணமாக தொழிலதிபர்கள் முன்னேறிச் செல்கின்றனர்.எடுத்துக்காட்டாக வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பி ஓடிய மெகுல் சோக்ஷி உட்பட 50 பேரின் 68,000 கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்தது ஆர்டிஐ மனு மூலம் அம்பலம் ஆனது மக்களுக்கு தெரிந்ததே.இப்படிப்பட்ட நிகழ்வுகளை பார்க்கும் போது உலகளாவிய உற்பத்தி இடர் அட்டவணையில் இந்தியாவுக்கு 3வது இடம் பெற்றுள்ளது என்று சொல்ல தயக்கமாகவும் உள்ளது.தற்போது மக்கள் இந்த கொரோனா காலத்தில் படும் பாடுகளையும்,இன்னல்களையும் பார்க்கும் போது பாஜக அரசு என்ன செய்யப் போகிறது என்றகேள்வி மனதில் எழாமல் இல்லை.