tamilnadu

img

இந்தியா வளர்ச்சியின் வாசற்படியில் நிற்கிறது... ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் சொல்கிறார்

புதுதில்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் செயலாளராக பணியாற்றியவரும், 15-ஆவது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவருமான என்.கே. சிங்கின் சுயசரிதையான ‘போர்ட்ரெய்ட்ஸ் ஆப் பவர்’ புத்தக வெளியீட்டுவிழா, தில்லியில் நடைபெற் றது.இதில் காணொலி முறையில் கலந்துகொண்டு, ரிசர்வ்வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் உரையாற்றியுள்ளார். அந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது:

பொருளாதார வளர்ச்சிக்கு, நிதி நிறுவனங்கள், போதுமான மூலதனம் வைத்திருக்கவேண்டியது மிக முக்கியமாகும். அந்த வகையில், வங்கிகளும் நிதிநிறுவனங்களும் போதிய கடன் அளிக்கும் வகையில் மூலதனத் திரட்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கெனவேமூலதனத்தை அதிகரித்துள்ளனர். தற்போது தனியார் துறையினரும் மூலதனத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரத்தின் மீட்புக்கட்டம் தொடங்கியவுடன் போதிய அளவு கடன் கொடுக்கும் வகையில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இருக்க வேண்டியது அவசியம்.மத்திய அரசு மற்றும் ரிசர்வ்வங்கியின் நாணய மற்றும் நிதிக்கொள்கைகள் காரணமாக, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம்,ஊரடங்கு, பொதுமுடக்கத் தால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறுவதற் கான வாசற்படியில் இந்தியா தற்போது நிற்கிறது.இந்நிலையில், கொரோனாவுக்குப் பின், இந்தியா பின்பற்றவேண்டிய நிதி சார்ந்த திட்ட வரைபடத்தை, மத்திய அரசு வகுக்கவேண்டும்.இவ்வாறு சக்திகாந்த தாஸ்பேசியுள்ளார்.