tamilnadu

img

இந்தியா:  கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடர்ந்த கொரோனா வைரஸ், தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள 560 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 492-ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மராட்டியத்தைச் சேர்ந்த 65 வயது நபர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்துள்ள 65-வயது நபர் துபாயிலிருந்து மும்பை திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.