tamilnadu

img

இந்தியா: கொரோனா பெருந்தொற்றுக்கு  ஒரே நாளில் 149 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் உகான் மாகாணத்தில்  கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 199 நாடுகளில்  பரவி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக அதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 873 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 177 பேருக்கும், கேரளாவில் 165 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் 19 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.