tamilnadu

img

தமிழகத்திலிந்து ஒடிசாவுக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளி பலி

தமிழகத்தில் இருந்து ஒடிசாவுக்கு சாலை வழியாக நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டம் லச்சிபேடா அருகே பூபன் பலி பகுதியை சேந்தவர்  ராம் பிஸ்வாஸ்.  இவர் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேறு வலியில்லாமல் சொந்த ஊருக்கு திரும்ப முயன்றார். இந்நிலையில் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் நடந்தே  சென்னையை கடந்து ஆந்திரா வழியாக ஒடிசா செல்ல முயன்றார். இதையடுத்து சில நாட்கள் நடந்து கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையை அடைந்த நிலையில் கடை வாசல் ஒன்றில் திங்களன்னு தங்கினார். இதையடுத்து செவ்வாயன்று காலை இவர் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்ட தூய்மை பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி நமச்சிவாயத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  ஊராட்சி மன்ற தலைவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். 
கும்மிடிப்பூண்டி வழியாக நாள்தோறும்  ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே ஊர் திரும்பி வரும் நிலையில்  வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.