tamilnadu

ஜிஎஸ்டி வரி குளறுபடியை  தவிர்க்க  எஸ்எம்எஸ் வசதி

 புதுதில்லி,ஜூன் 30- ஜிஎஸ்டி வரி செலுத்து வதில் ஏற்படும் குளறுபடி களை தவிர்க்கும் வகையில் வர்த்தகர்கள், தொழில்நிறு வனங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி மேம்படுத்தப் பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்து வது குறித்த தகவல்களை வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகை யில், எஸ்.எம்.எஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. எந்த தேதிக்குள் ஜிஎஸ்டி வரி செலுத்துவது, ரிட்டன் தாக்கல் செய்வது உள் ளிட்டவை குறித்து, மூன்று நாட்களுக்கு முன்பே எஸ் எம்எஸ் அனுப்பும் வசதியை ஜிஎஸ்டி தொழில்நுட்ப பிரிவு மேற்கொண்டு வருகிறது. முன்கூட்டியே எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகள், வரி ஏய்ப்பு உள்ளிட்டவை தவிர்க்கப்படும் என்று ஜிஎஸ்டி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.